• (0)

    தமிழர் புலப்பெயர்வு

    உலகளாவிய தமிழரின் பயணங்களும், குடியேற்றங்களும் பற்றிய வரலாறு.

    தமிழர் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ் நிலத்திலிருந்து புலம் பெயர்ந்திருக்கின்றனர். உலகத் தமிழரின் தொடர்ந்த பயணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா..?

    1. பண்டைய கிரேக்க ரோமானியரோடு வணிகம்
    2. பௌத்த சமய பரவலாக்கப் பின்னனி
    3. பல்லவர், சோழர், பாண்டியர் கால பயணங்கள்
    4. பொ.ஆ 14ஆம் நூற்றாண்டு கால பயணம் குறிப்பாக மரைக்காயர், லப்பை, சோளிய இஸ்லாமிய வணிகர்கள், தமிழ் வணிகர்களின் பயணங்களினால் ஏற்பட்ட புலம்பெயர்வு
    5. அச்சு இயந்திரம் – அச்சுப்பதிப்பாக்கம் உருவாக்கிய புலப்பெயர்வுகளுக்கான தேவைகள்
    6. அடிமை வணிகம் – இதன் வழி ஏற்பட்ட பேரளவிலான தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
    7. ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
    8. யாழ்ப்பாணத் தமிழரின் ஆங்கிலேயர் காலனித்துவ கால புலப்பெயர்வுகள், இலங்கை போர் காலத்தில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள்..
    9. 20ஆம் நூற்றாண்டில் – பர்மா மக்கள் நாடு திரும்புதல், மத்திய கிழக்காசியா, ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் இந்திய நாடுகடந்த அரசு
    10. உலகத் தமிழாய்வுகளில் தனிநாயகம் அடிகளின் பங்களிப்புகள், அண்மைய புலம்பெயர்வுகள், இன்றைய நிலை

    என 10 அத்தியாயங்களில் தமிழரின் 2500 ஆண்டுகால புலப்பெயர்வுகளை விவரிக்கின்றது இந்த நூல்.

    500.00
  • (0)

    பாதை அமைத்தவர்கள்

    வெளிநாடுகளில் இருப்பதைப்போல் பெண்களுக்கான அரங்கு (Hall of Fame) உள்ள பெண்கள் அருங்காட்சியகம் ஒன்று உருவானால் நிவேதிதா நூல்களில் உள்ள அனைத்துப் பெண்களும் அதில் இருப்பார்கள். பல முயற்சிகள் எடுத்து, பலர் உதவியுடன் விடாமல் தரவுகளைத் தேடி, பலர் பார்வைக்குப் பொதுவெளிக்கு இவர் கொண்டுவந்திருக்கும் பல பெண்கள் இந்த நூலில் உண்டு. திரைப்படம், பல துறை மருத்துவம், இசைக் கலை, நாட்டியம், எழுத்து, திரைப்பாடல், கல்வி, விமானப் படை பணி, உளவுத் தொழில், பட்டயக் கணக்கு, செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கு, செவிலியர் பணி என்று பல துறைகளில் செயல்பட்ட பெண்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் உயிர்ப்புள்ள மொழியில் கூறுகிறார்.
    நாம் அறிந்த எழுத்தாளரான திலகவதியுடன் நிவேதிதா செய்த மிக நீண்ட நேர்காணல் அவரைப் பற்றிய பல புதுத் தகவல்களைத் தருகிறது. அவரை மனம் திறந்து பேச வைக்கிறார் நிவேதிதா. அவரும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார். மிகவும் மனத்தை நெகிழ்த்தும் நேர்காணல் இது – அம்பை

    300.00
  • (0)

    இலங்கை -எழுதித் தீராச் சொற்கள்

    ரமாதேவி அவர்கள் இலங்கையின் வரலாற்றைத் தொட்டுக்கொண்டு, தான் இலங்கையில் பயணித்த போது சந்தித்த மக்களின் வாழ்வியலையும் பழக்கவழக்கங்களையும் பண்பாடு, சமையல், நகைச்சுவை, ஏக்கம், இயலாமை, தார்மீகக்கோபம் எனப் பல பக்கங்ளையும் பதிவு செய்திருக்கும் சிறந்த நூல்.

    ரமாதேவி இரத்தினசாமி ஈழத்தின்மீது கொண்ட பெருங்காதலை இலங்கை – எழுதித் தீராச் சொற்களை வாசிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.

    ”ஈழத்துக்காக வடித்த காதல் கடிதமாகவும் இதைக் கொள்ளலாம்” – என ரமாதேவி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    300.00
  • (0)

    அகம்

    300.00
  • -10%